October 2, 2023 11:50 pm
adcode

“அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியமானது” – யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் தொலைபேசியில் பேசிய யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி, நாடு முழுவதும் சண்டை நடந்து வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரம் யுக்ரேனுக்கு மிக முக்கியமான காலகட்டமாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

தொலைபேசி அழைப்பின் போது, பிரதமர் ஜான்சன் ரஷ்யாவின் படையெடுப்பில் இருந்து யுக்ரேனைப் பாதுகாப்பதில் ஸெலென்ஸ்கியின் தலைமையைப் பாராட்டினார் என்று பிரிட்டன் அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் தற்காப்பு உதவி யுக்ரேனை சென்றடைவதை உறுதி செய்ய பிரிட்டன் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று ஜான்சன் கூறினார்.

இரு தலைவர்களும் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.

Share

Related News