2022 ஜனவரி முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் மாதாந்தம் 5,000 வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று அறிவித்துள்ளார்.
நிதியமைச்சரின் கூற்றுப்படி, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இந்த மாதத்தில் இருந்து ஒரு வருட காலத்திற்கு ரூ.5000 வழங்கப்படும்.
மேலும், சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக கொடுப்பனவாக ஜனவரி 2022 முதல் மாதம் ரூ. 1,000 வழங்கப்படும்.
அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.