இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு சொத்துக்கள் திணைக்களத்தினால் வெளியிடப்படும் வெளிநாட்டு கடன் தொடர்பிலான சாராம்சத்தின் பிரகாரம், 2021ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் இலங்கையின் முழு கடன் நிலுவை தொகையாக $35.1 பில்லியன் காணப்படுகின்றது.
2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 30ம் தேதி வரை $981.0 மில்லியன் கடன் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு செலுத்தப்பட்ட கடனில் $520.6 மில்லியன், அடிப்படை கடனை மீள செலுத்துவதற்காகவும், எஞ்சிய $460.4 மில்லியன் வட்டியை செலுத்துவதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட, வெளிநாட்டு கடன் சாரம்சத்தை மேற்கோள்காட்டி, இலங்கையின் கடன் சாரம்சத்தை கொழும்பிலுள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ளது. ”வேறொரு வசனத்தில் கூறுவதென்றால், மேற்குலக நாடுகளின் ”கடன் பொறியிலிருந்து” இலங்கையை சீனாவே காப்பாற்றியது” என அதில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இலங்கைக்கு பிரதான கடன் வழங்குநர்களின் விபரங்கள்:
01.வர்த்தக கடன் பெறுகின்றமை அல்லது சர்வதேச சாவரின் பத்திரங்கள் (ISB) 47%
02.ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) – 13%
03.சீனா – 10%
04.ஜப்பான் – 10%
05.உலக வங்கி – 9%