இலங்கையின் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை விடுத்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபிவர்தன, ஜனாதிபதி கோத்தபாய நாட்டிற்கு வெளியில் இருப்பதால் அவருக்கு சார்பாக செயற்படுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளார்.
இலங்கை அரசியலமைப்பின் 37 (01) பிரிவின்படி ரணில் விக்கிரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.