விளையாட்டு அமைச்சின் அனுமதியின்றி லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பந்தயம் மற்றும் கேமிங் நிறுவனம் எவ்வாறு போட்டிக்கு பிரதான அனுசரணை வழங்க முடியும் என SJB பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சனிக்கிழமை (26) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விளையாட்டு அமைச்சர், விளையாட்டு அமைச்சர் என்ற வகையில் தானும் அந்த உடன்படிக்கையை காணவில்லை.
ஆசியக் கிண்ணத் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு அனுசரணை வழங்கிய விளையாட்டு பந்தய நிறுவனமான “Fair play” பற்றிக் குறிப்பிட்ட அமைச்சர், இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தேசிய ஜெர்சியில் பந்தய சின்னங்களை வைக்க வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
SLC ஏற்பாடு செய்த T10 போட்டியை ஊடகங்களில் பார்க்கும் வரை தமக்கு தெரியாது என்று அவர் மேலும் கூறினார்.
“T10 போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் இருந்துதான் எனக்கும் தெரியவந்தது. இதுதான் நிலைமை. Fair play ஒரு பந்தயம் மற்றும் கேமிங் நிறுவனம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், மேலும் வீரர்களின் ஜெர்சியில் இந்த பெயரைச் சேர்ப்பது பொருத்தமானது அல்ல என்று நாங்கள் ஏற்கனவே SLC க்கு அறிவுறுத்தியுள்ளோம்” என்று அவர் மேலும் கூறினார்.