இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் பல சர்வதேச நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளதாக மருந்துப் பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தும் அரச அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது 40 வகையான மருந்துகள் உட்பட பல அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.