சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் யா மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை குறைந்தது ஒரு மணிநேரம் மின்சாரம் தடைப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 900 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் முழுமையாக இயங்கும் வரை மின்வெட்டு நீடிக்கும்.
“அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு, இலங்கையின் சில பகுதிகளில் சுமையை சமப்படுத்த சுமார் 1 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும்” என்று CEB அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.