இலங்கை மின்சார சபை (CEB) பாதுகாப்பு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட அதன் ஒன்லைன் கட்டண முறையை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் (SLCERT) உதவியுடன் இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டதாக அறிக்கையொன்றை வெளியிட்ட CEB தெரிவித்துள்ளது.
பங்குதாரர் வங்கிகளுடன் ஏற்கனவே உள்ளக நல்லிணக்கப் பொறிமுறையானது இச்சம்பவத்தின் காரணமாக CEB க்கு ஏற்படக்கூடிய எந்தவொரு நிதி இழப்புகளையும் தடுத்ததாக CEB அறிவித்துள்ளது.
மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கணினி வழிக் கொடுப்பனவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்பதை உறுதிசெய்து, CEB ஒன்லைன் கட்டண முறைமையில் மீண்டும் இணையுமாறு நுகர்வோரை CEB கேட்டுக்கொண்டது.