September 28, 2023 3:48 am
adcode

ஓமானிலிருந்து 15 பேர் நாடு வந்தனர்

ஓமானில் பாதுகாப்பு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 15 பேர் நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 206 இல் அவர்கள் அதிகாலை 5.00 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓமானில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தற்போது 117 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் உள்ளனர், அவர்களில் 17 பேர் இலங்கைக்கு அனுப்ப ஓமானின் மஸ்கட் விமான நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டனர், அவர்களில் இரு வீட்டுப் பணியாளர்கள் அவர்களின் ஆவணங்கள் குறைபாடுகள் காரணமாக மஸ்கட் விமான நிலையத்தால் நிராகரிக்கப்பட்டனர்.

Share

Related News