2021 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 231,982 பரீட்சார்த்திகள் உயர்தரப் படிப்புகளுக்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (25) வெளியான முடிவுகளின்படி தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 10,863 பேர் 9A பெற்றுள்ளனர். 6,566 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளனர். மேலும், 498 வேட்பாளர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.