கண்டி – குண்டசாலை பகுதியில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட உறவினர்களால், சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
51 வயதுடைய பெண் ஒருவரே சமையல் எரிவாயுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.