டிரைவிங் சோதனைகளை கண்காணிக்க சிசிடிவியை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பரிசீலித்து வருகிறது. ஊழல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
சிசிடிவி கமராக்களின் பாவனை இதற்கு முன்னர் பரிசோதிக்கப்பட்டிருந்த போதிலும், அவை இடைநிறுத்தப்பட்டிருந்ததாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் புதிய முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் சிசிடிவி கமராக்களைப் பயன்படுத்தி மற்றொரு சோதனையை நடத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உத்தேசித்துள்ளது.
எழுத்துத் தேர்வுகளில் கைரேகை ஸ்கேனிங்கை அறிமுகப்படுத்தவும் திணைக்களம் பரிசீலித்து வருகிறது, தற்போது வெரெஹெரா தேர்வு மையத்தில் செயற்படுத்தப்படும் இம் முறை, நாடு முழுவதும் விரைவில் பயன்படுத்தப்படவுள்ளது.