September 28, 2023 2:40 am
adcode

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ள உத்தரவு

நேற்று முன்தினம்(22) நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

 

மாகாணக் கல்வித் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.

 

கல்கமுவ  ,பதுளை , காலி-நாகொட உள்ளிட்ட பகுதிகளில் சில பாடசாலைகள் சிலவற்றில் இவ்வாறான முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Share

Related News