நாட்டில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களின் போது பொதுப் போக்குவரத்து சேவைகள் எவ்வித இடையூறும் இன்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த பொலிஸாரிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் தடையின்றி பயணிக்க அனுமதிக்குமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.