September 25, 2023 4:46 am
adcode

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் முழுமையாக ஆரம்பிப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்தி?

தற்போது நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் முழுமையாக ஆரம்பிப்பது சாத்தியமில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.

 

பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் விடுதிகளில் தங்கி கல்வி கற்பதனால்; அவர்களிடையே Covid-19 பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

 

அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ளவாறு பல்கலைக்கழக கட்டமைப்பு தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

விடுதிகளில் உள்ள அனைத்து வசதிகளையும் பொதுவாகப் பயன்படுத்துவதனால் மாணவர்களிடையே Covid-19 பரவுவதைத் தடுக்க முடியாது. இவ்வாறானதொரு நிலைமையினால் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களும் வவுனியா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியும் மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Related News