September 30, 2023 9:00 am
adcode

பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்களுக்கான முக்கிய வேண்டுகோள்.

பல்கலைக்கழக மாணவர்கள் Covid-19 தடுப்பூசி பெறுவதில் அக்கறையற்ற நிலையில் காணப்படுவதாக வவுனியா பல்கலைக்கழகத்தின் வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

வவுனியா பல்கலைக்கழகத்தில் அண்மையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது.

 

இன்று உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 6 தடுப்பூசிகளில் சினோபாமும் உள்ளடங்குகின்றது.

 

எனவே பல நாடுகளுக்கு செல்வதற்கான அனுமதி சினோபாம் ஊசி ஏற்றியவர்களுக்கும் உண்டு.

 

இன்று தடுப்பூசி பெற்றவர்களின் இறப்பு வீதம் குறைவாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

 

எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசியை பெற ஆர்வம் காட்டவேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share

Related News