April 1, 2023 1:16 am
adcode

பாஸ்மா பின் சௌத்: 3 ஆண்டுகள் சிறையில் இருந்த சௌதி அரேபிய இளவரசி, மகள் விடுதலை

சௌதி அரேபியாவில் உள்ள உயர்பாதுகாப்பு சிறைச்சாலை ஒன்றிலிருந்து சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஒருவரும் அவரது மகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டிலுள்ள செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

இவர்கள் இருவரும் எந்தவிதமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமலேயே சுமார் மூன்றாண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக இளவரசி பாஸ்மா பின் சௌத் சுவிட்சர்லாந்து செல்லத் தயாராகிக் கொண்டிருந்த போது 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.

ஆனால் அவர் மீதும் அவருடன் கைது செய்யப்பட்ட அவரது மகள் சுஹௌத் மீதும் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்படவில்லை.

மூவருமே செளதி அரசை விமர்சனம் செய்த இளவரசர்கள் காணாமல் போகும் அல்லது கைது செய்யப்படும் நிகழ்வுகள் அதற்கு முன்னரும் நிகழ்ந்துள்ளன.

சௌதி அரேபியாவில் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அங்குள்ள மனித உரிமை விவகாரங்கள் குறித்தும் இளவரசி பாஸ்மா பின் சௌத் தொடர்ந்து குரல் எழுப்பி வந்ததால் அவர் கைது செய்யப்பட்டார் என்று சிலர் கருதுகிறார்கள்.

சௌதி அரேபியாவில் நடக்கும் உரிமை மீறல்கள் குறித்து குரல் எழுப்பி வந்ததே இவர் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று அவரது குடும்பத்தினர் 2020ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தனர் என்று ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு உள்ளதாக கருதப்படும் முன்னாள் பட்டத்து இளவரசர் முகமது பின் நய்ஃப் உடன் பாஸ்மா மிகவும் நெருக்கமான தொடர்பில் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் இவரது ஆதரவாளர்கள் சிலர் கூறுகிறார்கள்.

Share

Related News