October 3, 2023 12:24 am
adcode

மருந்து எதிர்ப்புத் திறன் காரணமாக லட்சக்கணக்கில் ஏற்படும் உயிரிழப்புகள் – அதிர்ச்சி அறிக்கை

ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எதிர்கொள்ளும் திறன் கொண்ட பாக்டீரியா (நுண்ணுயிரி எதிர்ப்பு) தொற்று காரணமாக, கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் முழுக்க 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலேரியா அல்லது எய்ட்ஸ் ஆகிய நோய்களினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிராக நோய்களுக்கு எதிர்ப்பாற்றல் கிடைப்பதால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம்.

உலகில் ஏழை நாடுகள் இந்த பிரச்சனையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்றாலும், அனைவரின் உடல் நலத்திற்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக அவ்வறிக்கை கூறுகிறது.

புதிய மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு முதலீடு செய்வது, தற்போது இருக்கும் மருந்துகளை கவனமாக பயன்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் இந்த பிரச்சினைக்கு தீர்வாகப் பரிந்துரைக்கப்படுகின்றன.

சாதாரண நோய்த் தொற்றுகளுக்கு கூட அதிகப்படியாக ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துவது சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. எனவே தீவிர நோய் தொற்றின்போது ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் செயல் திறன் குறைகிறது.

இதற்கு முன்பு சிகிச்சை அளித்து குணப்படுத்தக்கூடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தற்போது சிகிச்சை பலனின்றி இறந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் அந்த பாக்டீரியா மருந்துகளை எதிர்கொள்ளும் திறனை பெற்றுவிட்டது.

ஆன்டி மைக்ரோபயல் ரெசிஸ்டன்ஸ் (ஏ எம் ஆர்) என்றழைக்கப்படும் இந்தப் பிரச்சனை மறைந்திருக்கும் பெருந்தொற்று என பிரிட்டன் சுகாதார அதிகாரிகள் சமீபத்தில் எச்சரித்துள்ளனர். கவனமாக ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பரிந்துரைக்கவில்லை எனில், இது கொரோனா பெருந்தொற்றுக்கு இடையில் வெளிப்படலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Share

Related News