September 28, 2023 4:30 am
adcode

மியன்மாரிலிருந்து 20,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி!!!

சந்தையில் அரிசிக்கான ஸ்திர விலையை முன்னெடுப்பதற்காக, அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு எனும் அடிப்படையின் கீழ் இலங்கை மற்றும் மியன்மார் அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் 100,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்காக கடந்த செப்டெம்பர் மாதத்தில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதுதொடர்பாக நேற்று (30) அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் வருமாறு:

09. உள்ளூர் சந்தையில் அரிசி விலையை நிலைப்படுத்துவதற்காக மியன்மார் (பர்மா) இலிருந்து அரிசி இறக்குமதி செய்தல்

பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், பாதுகாப்பான கொள்ளளவைப் பேணுவதற்கும் இயலுமான வகையில் 100,000 மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு 2021 செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு எனும் அடிப்படையின் கீழ் இலங்கை அரசாங்கம் மற்றும் மியன்மார் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் 20,000 மெற்றிக்தொன் அரிசியை, ஒரு மெற்றிக்தொன் 460 அமெரிக்கன் டொலர்களுக்கு வரையறுக்கப்பட்ட இலங்கை வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share

Related News