யுக்ரேன் மீதான ரஷ்யாவுப் படையெடுப்பிற்காக மேற்கத்திய நாடுகள், ஸ்விஃப்ட் உலகளாவிய கட்டண முறையிலிருந்து ரஷ்ய வங்கிகளைத் தடை செய்வது உட்பட, கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்ததைத் தொடர்ந்து திங்கள் கிழமை காலையில், ரஷ்ய ரூபிளின் மதிப்பு சுமார் 30% சரிந்தது. அப்போது, கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு ஐரோப்பிய அரசின் மீதான மிகப்பெரிய தாக்குதலின் நான்காவது நாளான, ஞாயிறு அன்று, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அணு ஆயுதப் படைகளை தயார் நிலையில் வைத்ததை அடுத்து, யூரோவின் மதிப்பும் குறையவே, டாலர் மற்றும் யென் பாதுகாப்பானவையாக உள்ளன.
எண்ணெய் சராசரியாக 4 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து தற்போது, ஒரு பீப்பாய்க்கு 102.14 டாலர்களாக உள்ளது.