September 26, 2023 8:43 pm
adcode

யுக்ரேன் பதற்றம்: “எந்த நேரத்திலும் ரஷ்ய படையெடுப்பு நடைபெறலாம்” – எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

யுக்ரேன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்றும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக யுக்ரேனைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வேறு சில நாடுகளும் தங்கள் நாட்டினர் யுக்ரேனில் இருந்து வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளன.

அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையால், பிற நாடுகளும் யுக்ரேனில் உள்ள தங்களின் குடிமக்களுக்கு புதிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள், தங்கள் குடிமக்கள் விரைவில் யுக்ரேனில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளன.

ரஷ்யாவும் அமெரிக்காவும் யுக்ரேன் தலைநகர் கீவில் இருந்து தங்கள் தூதரக ஊழியர்களை அழைத்து கொள்கின்றன.

அமெரிக்க தூதரக ஊழியர்கள் போலந்து எல்லைக்கு அருகில் உள்ள நாட்டின் மேற்குப் பகுதிக்கு இடம் பெயர்வார்கள் என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவிக்கிறது.

Share

Related News