கொழும்பு 7ல் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு எதிரே ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.
ஜனாதபதியின் ராஜினாமாவுடன், பிரதமரும் ராஜினாமா செய்யக் கோரி பிரதமரின் இல்லம் அருகே பொதுமக்கள் திரண்டனர்.
இலங்கையில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து பிரதமர் பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளது.