இந்த வருட சுதந்திர வைபவத்தில் கலந்து கொள்வதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, பணத்தை விரயம் செய்யும் கொண்டாட்டங்களில் பங்குபற்ற வேண்டாம் என கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.