16 காரிக் கொண்ட சர்வதேச ரீதியிலான அல்குர்ஆன் பயிற்சி நெறிக்கு தெல்தோட்டையில் இருந்து அல்ஹாபிழ் முகர்ரம் தெரிவு
அல்குர்ஆன் பயிற்சி நெறிக்கு சர்வதேசத்திலிருது 16 காரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில்
இலங்கையிலிருந்து மாத்திரம் 05 காரிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபிய மதீனா நகரில், “அல்குர்ஆனை அழகிய முறையில் ஓதி மற்றவர்களுக்கும் அதனை கொண்டு செல்லும் இலகுமுறை பயிற்ச்சிக்காகவே இவர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இணையமூடாக சர்வதேசமெங்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, Online மூலம் அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேரடியாக ஓத வைத்து ,அதிலிருந்து அழகிய முறையில் ஓதிய காரிகளிலிருந்தே 16 பேர் இப் பயிற்சி நெறிக்கு தெரிவாகி நேற்றைய தினம் (11/09) மதீனா நகரை சென்றடைந்திருக்கிறார்கள்.
மதீனாவின் அதி சிறந்த காரிகளினூடாக ,மஸ்ஜிதுன் நபவி இமாம்களின் மேற்பார்வையில் இவர்களுக்கான பயிற்சிகள் நடைபெறவிருக்கிறது.
இவர்களுக்கான பயிற்சி நெறிகள் இன்றிலிருந்து ஒரு மாத காலம் நடைபெற்று இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 11/10/2022 யில் நாடு திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
.
இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 05 காரிக்களின் விபரம்.
(1) அல்ஹாபிழ் முகர்ரம் (தெல்தோட்டை)
(2) அல்ஹாபிழ் றிFராஸ், (கொழும்பு)
(3) அல்ஹாபிழ் அப்துல்லாஹ் (அடுலுகம)
(4) அல்ஹாபிழ் பிர்னாஸ் (கொழும்பு)
(5) அல் ஹாபிழ் இப்ராஸ், (ஏறாவூர்)