கனடாஅரசாங்கம் யுக்ரேனுக்கு கூடுதலான 19.6 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவியைச் செய்வதாக அறிவித்துள்ளது. முதல் கட்டமாக கனடா 7 மில்லியன் கனடிய டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்கியது. அதைத் தொடர்ந்து கூடுதலாக இவை அனுப்பப்படும்.
ஞாயிறு அன்று இந்த வாக்குறுதியை அறிவித்த கனடா பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், யுக்ரேனுக்காக கனடிய படைகளை அனுப்புவதாக கனடா அல்லது நேட்டோ நட்பு நாடுகள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.
உலகின் பல பகுதிகளைப் போலவே, யுக்ரேனுக்கு ஆதரவாக கனடா முழுவதும் ஞாயிற்றுக் கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
சுமார் 1.3 மில்லியன் யுக்ரேனிய-கனடியர்களைக் கொண்ட கனடா, யுக்ரேன் மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக, அதிக யுக்ரேனிய மக்கள் தொகையைக் கொண்ட உலகின் மூன்றாவதாக நாடாக உள்ளது.